முதற்கண்ணாக.,
இந்த வலைப்பூவை பார்வையிட வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினை சமர்பிக்கிறேன்...
Wednesday, 18 November 2020
புதிய பார்வை...புதிய கோணம்...
Tuesday, 17 November 2020
புதிய பார்வை..புதிய கோணம்..
Tuesday, 10 November 2020
இரண்டாம். கொரோனா அலை..வருமா..?
Sunday, 8 November 2020
புதிய பார்வை.. புதிய கோணம்...
Sunday, 10 May 2020
வகுப்பறை தொழில்நுட்ப ம்..
Tuesday, 7 April 2020
Sunday, 29 March 2020
Saturday, 21 March 2020
விண்டோஸ் ...ஆப்ஸ்..
..விண்டோஸ் லேப்டாப் அல்லது பிசி வைத்திருக்கிறீர்களா? இந்த ஆப்களையெல்லாம் முயற்சி செய்யலாமே ஃப்ரெண்ட்ஸ்!
இன்று என்னதான் ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டாலும், இன்னும் கணினி மற்றும் லேப்டாப்களில் விண்டோஸ் ஓஎஸ் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான, அனைவருக்கும் தேவைப்படும் சில ஆப்கள் மற்றும் மென்பொருள்கள் தவிர பெரிதாக வேறு எதையும் நாம் பதிவிறக்குவதில்லை. ஆனால் அப்படி அத்தியாவசிய தேவையில்லையென்றாலும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய சில ஆப்களை பற்றிப் பார்ப்போம்.
Ueli
விண்டோஸில் இருக்கும் சர்ச் ஆப்சன் நன்றாக இருந்தாலும் சில விஷயங்களை அதில் எளிதாகத் தேடமுடியாது. இதை இன்ஸ்டால் செய்து alt+space-ஐ சேர்த்து அழுத்துவதன் மூலமே ஆப், சிறிய கணக்குகள், புரியாத வார்த்தைகள் என வேண்டியதைத் தேடமுடியும். இது மேக் ஓஎஸ்சில் இருக்கும் சர்ச் வசதியைப் போல செயல்படும். மேலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப இதன் லுக் மற்றும் வசதிகளை எளிதாக மாற்றியமைக்கமுடியும். உங்கள் கம்ப்யூட்டரில் தேடுவதை எளிதாக்க விரும்பினால் இதைப் பதிவிறக்கலாம்.
ShareX
விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எளிதென்றாலும், இந்த ShareX கொடுக்கும் வசதிகளில் பாதியை கூட அது கொடுக்காது. பல வகையான முறைகளில் ஸ்கிரீன்ஷாட் எடுக்க உதவும் இது எந்த ஃபார்மட்டில் வேண்டுமோ அதில் போட்டோவை எக்ஸ்போர்ட் செய்யமுடியும். மேலும் இதில் ஸ்கிரீனில் நடப்பதை விடியோவாகவும் ரெகார்ட் செய்யமுடியும். எடுத்தவுடன் நேரடியாக கிளவுட்டில் பதிவேற்றுவது எனப் பல மேம்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளது இது. எனவே அடிக்கடி ஸ்கிரீன்ஷாட் மற்றும் ஸ்கிரீன்வீடியோ எடுக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
PeaZip
Zip மற்றும் Rar ஃபைல்களை எக்ஸ்ட்ராக்ட் செய்வதற்குப் பெரும்பாலானோர் Winrar ஆப்பைதான் பயன்படுத்துவோம். ஆனால் அது அடிக்கடி பிளான் எக்ஸ்பைரி ஆகிவிட்டது என பாப்-அப்களை அனுப்பும். எக்ஸ்ட்ராக்ட் செய்யவும் அவ்வளவு எளிதாக இருக்காது. இதற்கு மாற்றாக இலவச PeaZip ஆப்பை பயன்படுத்தலாம். இந்த ஆப் மூலம் எக்ஸ்ட்ராக்ட் மட்டுமின்றி கம்ப்ரெஸ் செய்யவும் முடியும். அதுவும் பல ஃபார்மட்களில் செய்யமுடியும். பாஸ்வர்ட் கொண்டு கம்ப்ரெஸ் செய்வதென 'Compression' மற்றும் 'Extraction' தொடர்பான அனைத்துக்கும் இந்த ஒரு ஆப்பே போதுமென்பது சிறப்பு.
Convertor bot
பெயருக்கு ஏற்றது போலவே எந்த ஒரு டாகுமென்ட்டையும் வேண்டிய ஃபார்மட்டுக்கு மாற்றிகொடுக்கும் இந்த convertor bot. அலுவலக வேலைகள் மற்றும் பிற வேலைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இது. இதைப்போன்ற ஆப்கள் பெரும்பாலும் இணையத்திலேயே இருப்பதால் அங்கு உங்கள் டாகுமென்ட்டுகளை பதிவேற்றுவது எந்த அளவு பாதுகாப்பானது என்பது நமக்குத் தெரியாது. எனவே இதைப்போன்ற ஆஃப்லைன் ஆப்பை இதற்குப் பயன்படுத்துவது நல்லது.
Wiztree
நீங்கள் ஒரு லேப்டாப் பயன்பாட்டாளர் என்று வைத்துக்கொள்வோம். முழுவதும் SSD வகை ஸ்டோரேஜ் கொண்ட உங்கள் லேப்டாப்பில் 128 GB மட்டும்தான் ஸ்டோர் செய்யமுடியும். இதனால் அடிக்கடி உங்கள் லேப்டாப்பில் இடமில்லாமல் போகும். எது அதிக இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறதென தெரியாமலேயே பார்க்கும் ஃபைல்களை எல்லாம் டெலீட் செய்வோம். இப்படியான சூழலில் எது அதிக இடத்தைப் பிடிக்கிறது எனக் கண்டறிய மிகவும் உதவிகரமாக இருக்கும் Wiztree. இது ஃபைல்களின் சைஸை கொண்டு சார்ட் ஒன்றை ரெடி செய்யும். இதன்மூலம் அதிக இடம் பிடிக்கும் ஃபைல்களை எளிதாக டெலீட் செய்யமுடியும்.
நன்றி நட்புகளே....
மாணவர் நலம் கருதி...
வெற்றி படிகட்டு....
*இதுவும் கடந்து போகும்* 🌼
................................................
🌼ஒரு ஊரில் மக்கள் மத்தியில் புத்தர் பேசத் தொடங்கினார்.
🌼ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித்தது.
தொடர்ந்து புத்தரை நோக்கி,
“புத்தரே நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம்.
🌼ஆனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.
இப்போதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது.
🌼எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது.
🌼அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக, அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி மந்திரங்களைச் சொல்லித் தாருங்கள்.
🌼தேவையற்ற பிரசங்கம் வேண்டாம்.
🌼நாங்கள் மனப்பாடம் செய்து எல்லோருக்கும் சொல்லத்தக்க அளவில் சிறியதாக இருக்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான மந்திரத்தைச் சொல்லுங்கள்.
🌼உங்களைக் குருவாக ஏற்றுக்கொள்கிறோம்”
என்றது அக்குரல்.
🌼மௌனமாக சிரித்த புத்தர்,
“இதுவும் கடந்து போகும்”
என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
🌼அந்த கணமே அக்கூட்டம் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்தது. புத்தரின் மந்திரத்தை மனசுக்ள் அசைபோட்டது.
🌼நன்றாகப் படித்திருந்தும் பணம் சம்பாதிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருந்த இளைஞனுக்கு தன்னம்பிக்கையைத் தந்தது அந்த வார்த்தை.
🌼“இதுவும் கடந்து போகும்” 🌼என்ற வார்த்தையால் என்னுடைய நிலை கண்டிப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
🌼இம்மந்திரத்தைத் தினந்தோறும் உச்சரித்து இன்னமும் எனக்கு வேண்டிய பலம் பெற்றுக்கொள்வேன்” என்று உரக்கச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.
🌼“இம்மந்திரத்தால் என்னுடைய நீண்ட கால நோய் கண்டிப்பாகத் தீர்ந்துவிடும். இனிமேலும் எனக்கு இந்நிலை தொடராது. இது மிகவும் நல்ல மந்திரம் என்று கூறிச் சென்றான்” நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவன்.
🌼“இந்த பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது என்பதைப் புத்தர் எனக்கு இம்மந்திரத்தின் மூலம் புரிய வைத்துவிட்டார். இனி இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன்” என்று கூறிச் சென்றான் பணக்காரனாக இருந்தவன்.
🌼அடுத்து இருந்த அழகான பெண், “என்னுடைய அழகு எப்போதும் என்னுடன் வராது என்பதை இம்மந்திரம் எனக்குப் புரிய வைத்துவிட்டது” என்று கிளம்பினாள்.
🌼கடைசியாக, தினந்தோறும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பெண்மணி கிளம்பும் போது, “இத்தனை நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். மரணம் வரையிலும் உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் இந்த மந்திரத்தின் மூலம் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. என்னுடைய நிலையும் மாறிவிடும்” என்று நம்பிக்கையுடன் சென்றார்..
🌼ஆம்,நண்பர்களே.,
தோல்விகள் தழுவும்போது
🌼 “இதுவும் கடந்து போகும்”🌼
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.சோர்ந்துவிட மாட்டீர்கள்.
🌼நல்ல மனிதர்களும்,நண்பர்களும் உங்கள் வாழ்வில் வரும்போது ‘இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
🌼அவர்கள் இருக்கும்போது அவர்களை கௌரவிப்பீர்கள்..
அவர்கள் விலகும்போது பாதிப்படைய மாட்டீர்கள்.
🌼எத்தனையோ மனிதர்களை மாற்றிய இந்த உன்னத சொல்
உங்கள் வாழ்விலும் இனி ஒளி ஏற்றும்.
🌼“இதுவும் கடந்து போகும்” என்பதை உறுதியுடன் நம்புங்கள்.
🌼கண்டிப்பாக மாறிவிடும். தோல்வியைச் சந்திப்பவர்கள்,
நோயில் இருப்பவர்கள், சிக்கலில் மாட்டியவர்கள்,
திசை தெரியாமல் இருப்பவர்கள் ,
🌼அனைவரும் தினமும் இதை மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள்.🌼
🌼 *வெற்றி நிச்சயம்…* 🌼
👍👍👍👍👍👍
Tuesday, 18 February 2020
புதிய பார்வை...புதிய கோணம்...
உயர்ந்த
மனிதர்களின்
ஒப்பற்ற சாரம்
'நேர்மையே'.
'உண்மை'
எனப்படுவது
வேறு...
'நேர்மை'
எனப்படுவது
வேறு...
'உண்மை'
பேசுவது
முதல் படி.
'உண்மை'யை
கடை பிடிப்பது
இரண்டாம் படி.
'உண்மை'யாய்
நடப்பது
மூன்றாம் படி.
'உண்மை'யாகவே
இருப்பது
நான்காம் படி.
இவை
எல்லாவற்றையும்
தாண்டி...
'நேர்மை'யாய்
வாழ்வது
'உண்மை'யின்
உச்ச படி.
நல்ல
பண்பு,
உயர்ந்த
எண்ணம்,
மேன்மைமிகு
நடத்தை,
மாசில்லா
ஒழுக்கம்,
தூய்மையான
குணம்...
இவைகள்
'நேர்மை'யின்
வடிவங்கள்.
'நேர்மை'
ஒரு மனிதனின்...
உள்ளத்தை
தூய்மை
படுத்துகிறது.
வாக்கினிலும்
செயலிலும்
இனிமை
சேர்க்கின்றது.
பதட்டத்தையும்
கோபத்தையும்
குறைக்கிறது.
மன
அமைதியையும்,
ஞானத்தையும்
தருகின்றது.
குறைகளற்ற,
பரிபூரணமான
மகிழ்ச்சியை,
எந்நாளும்
அளிக்கின்றது.
இதன்
காரணமாக...
'நேர்மை'
ஒருவரை...
குன்றில்மேல்
இட்ட விளக்காய்,
'ஒளிர'
வைக்கின்றது.
ஒரு மரம்
தன்
'இலைகளை'
காட்டிலும்...
தன்
'கனிகளால்'
மதிப்புறுவதை
போல...
ஒரு
மனிதன்...
தன்
படிப்பில்,
பதவியில்,
செல்வத்தில்
காட்டிலும்...
தன்
'நேர்மை'யில்
மிளிர்கிறான்
என்பதே
உண்மை...
அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.