முதற்கண்ணாக.,

இந்த வலைப்பூவை பார்வையிட வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினை சமர்பிக்கிறேன்...

Thursday, 16 April 2015

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
 
பிரபல கவிஞர், சிந்தனையாளர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukkottai Kalyanasundaram) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உள்ள செங்கப் படுத்தான்காடு (சங்கம்படைத் தான்காடு) என்ற கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் (1930) பிறந்தார். தந்தை நாட்டுப் புறக் கவிஞர். உள்ளூர் சுந்தரம் பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத் தில் 2-ம் வகுப்பு வரை படித்தார்.

 குடும்பத் தொழிலான விவசாயம் மட்டுமின்றி, உப்பளம், நாடகம், மாம்பழ வியாபாரம், இட்லி கடை என 10-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டுவந்தார்.

 சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரது பாடல்களில் கிராமிய மணம் கமழ்ந்தது. கருத்துச் செறிவும் கற்பனை வளமும் படைத்த இவரது பாடல்களை ‘ஜனசக்தி’ பத்திரிகை வெளியிட்டுவந்தது.

 விவசாய சங்கம், பொதுவுடைமைக் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1952-ல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய ‘குயில்’ இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். தனக்கு தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுதான் கடிதம் எழுதத் தொடங்குவாராம்.

 பொதுவுடைமை சித்தாந்தங்களைப் பரப்ப அயராது பாடுபட்டார். ஏராளமான தத்துவப் பாடல்களை எழுதியுள்ளார். ‘படித்த பெண்’ திரைப்படத்துக்காக 1955-ல் முதன்முதலாக பாடல் எழுதினார். இதன் மூலம் திரைப்படத் துறையில் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தார்.

 1959 வரை எம்ஜிஆர் நடித்த 7 திரைப்படங்கள், சிவாஜி கணேசனின் 11 திரைப்படங்கள் உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். 180 திரைப்படப் பாடல்கள் மட்டுமே எழுதியுள்ளார். ஆனால், அவை அனைத்துமே காலத்தால் அழியாதவையாகத் திகழ்கின்றன. இயற்கை, சிறுவர், காதல், மகிழ்ச்சி, சோகம், நாடு, சமூகம், அரசியல், தத்துவம், பாட்டாளி வர்க்கம் ஆகியவை இவரது பாடல்களின் கருப்பொருளாக இருந்தன.

 இவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. ‘சின்னப் பயலே சின்னப் பயலே’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே’, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னரே’, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ ஆகியவை குறிப்பிடத்தக்க பாடல்கள்.

 எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகள், வாழ்வியல் தத்துவங்களை வெளிப்படுத்தியவர். பாடுவதிலும் வல்லவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இவரது நெருங்கிய நண்பர்.

 மக்கள் கவிஞர் என்ற பட்டம், பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 29 வயதில் (1959) மறைந்தார். குறுகிய காலமே வாழ்ந்த இவர், அதற்குள் பல்லாண்டு காலம் வாழ்ந்து நிகழ்த்தவேண்டிய சாதனைகளை நிகழ்த்திவிட்டார்.

 இவரது பாடல்கள் தொகுப்பு 1965-ல் வெளிவந்தது. இவரது நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் பட்டுக்கோட்டையில் 2000-ல் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.

நன்றி தி தமிழ் இந்து நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி சிவலிங்கம் 

அன்புடன் சிவா...
 


 

Monday, 13 April 2015

ஒரே ஆன்டிராய்டு மொபைலில் இரண்டு வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி?

பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்ஆப் இலவச அழைப்புகள், புகைப்படம், வீடியோ, இசை மற்றும் ஃபைல்களை பறிமாறி கொள்ள உதவுகின்றது. தற்சமயம் பெரும்பாலானோரும் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி வருவதற்கு முக்கிய காரணமாக அதன் எளிய வடிவமைப்பு மற்றும் சிறப்பான சேவையை கூறலாம்.

இருந்தும் வாட்ஸ்ஆப் செயலியில் ஒரே குறை இருக்கின்றது, டூயல் சிம் ஆன்டிராய்டு போன்களை பயன்படுத்துவோர் இரு சிம் கார்டுகளிலும் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது. ஒரு ஸ்மார்ட்போனில் ஒரு வாட்ஸ்ஆப் அக்கவுன்டு மட்டும் தான் பயன்படுத்த முடியும். இந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் ஆன்டிராய்டு செயலி தான் OGWhatsApp, இந்த செயலியை பயன்படுத்தி பயனாளிகள் இரு அக்கவுன்டை ஒரே ஸ்மார்ட்போனில் பயன்படுத்த முடியும்.
OGWhatsApp இரு வாட்ஸ்ஆப் அக்கவுன்டுகளை ஒரே கருவியில் பயன்படுத்த அனுமதிக்கின்றது, இதை செய்ய உங்களது போனினை ரூட் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

உங்களது வாட்ஸ்ஆப் டேட்டாவை முழுமையாக பேக்கப் செய்து ரீ ஸ்டோர் செய்ய வேண்டும்.

வாட்ஸ்ஆப் டேட்டாக்களை அழிக்க வேண்டும், இதை மேற்கொள்ள செட்டிங்ஸ் >> ஆப்ஸ் >> வாட்ஸ்ஆப் >> க்ளியர் டேட்டா என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

அடுத்து /sdcard/WhatsApp directoryயை /sdcard/OGWhatsApp என பெயர் மாற்ற வேண்டும். இதை மேற்கொள்ள ஃபைல் மேனேஜர் பயன்படுத்தலாம்.

ஒரிஜினல் வாட்ஸ்ஆப் செயலியை உங்களது ஆன்டிராய்டு கருவியில் இருந்து அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

அடுத்து OGWhatsApp செயலியை உங்களது ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

இன்ஸ்டால் செய்த பின் ஒரிஜினல் வாட்ஸ்ஆப் செயலியில் பதிவு செய்யப்பட்ட பழைய நம்பரை ஓஜி வாட்ஸ்ஆப் செயலியில் வெரிஃபை செய்ய பயன்படுத்த வேண்டும்.

பின் ஒரிஜினல் வாட்ஸ்ஆப் செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
நன்றி

Saturday, 11 April 2015

வ வே சுப்பிரமணிய ஐயர் 10

ராஜலட்சுமி சிவலிங்கம் 

வ.வே சுப்பிரமணிய ஐயர் 

சுதந்தர போராட்ட வீரரும் தமிழ் நவீன சிறுகதையின் தந்தை என்று போற்றப்பட்டவருமான வ வே சுப்பிரமணிய ஐயர் (வ.வே.சு. ஐயர்) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 2). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: 

 திருச்சி, வரகனேரியில் பிறந்தவர் (1881). தந்தை வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி யில் பி.ஏ. பட்டம் பெற்றார். மாகாணத்தில் முதல் மாணவராகத் தேறினார். 

 பின்னர் சென்னைக்குச் சென்று சட்டம் படித்து சென்னை மாநகர் ஜில்லா கோர்ட்டில் முதல் வகுப்பு ப்ளீடராக சேர்ந்து வக்கீல் தொழில் புரிந்தார். கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் மொழிகளில் புலமை பெற்றிருந்தார். 

 பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக1907-ல் லண்டன் சென் றார். அங்கே இந்தியா ஹவுசில் தங்கியிருந்த சமயத்தில் வீர சாவர்க்கர் உள்ளிட்ட சுதந்தர புரட்சி வீரர்களின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் ரகசியமாக நடத்தி வந்த அபிநவ பாரத் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். 

 ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகள் பெற்றார். மற்றும் பல இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்தார். பாரிஸ்டர் படிப்பிலும் தேர்ச்சியடைந்தார். பட்டமளிப்பு விழாவில் பிரிட்டிஷ் ராஜ விசுவாச பிரமாணம் எடுத்துக் கொண்டால்தான், பட்டம் வழங்கப்படும் என்பதால் அந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். 

 இதனால் இவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. சீக்கியர் போல மாறு வேடம் பூண்டு, பிரிட்டிஷ் உளவாளிகளை ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாக 1910-ல் புதுச்சேரி வந்து சேர்ந்தார். அரவிந்த கோஷ், பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி ஆகியோருடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். 

 1919-ல் மகாத்மா காந்தியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரால் கவரப்பட்ட ஐயர், அகிம்சாவாதியாக மாறினார். காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து அகிம்சா வழியில் சுதந்தரத்துக்காகப் போராடினார். 

 தேசபக்தன் இதழின் ஆசிரியராக சிலகாலம் பணியாற்றி னார். சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை கற்று தமிழ் மொழி செழிப்பதற்குப் பெரும் பங்காற்றினார். 1922-ல் சேரன்மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். 

 இங்கு நன்னெறி, அறிவியல், கலை, இலக்கியம் ஆகிய வற்றுடன் உடல் வலிவூட்டும் பயிற்சிகளும் அளிக்கப்பட் டன. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். குளத்தங்கரை ஆசிரமம் என்ற சிறுகதையை வெளியிட் டார். இதுவே முதன் முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதை. 

 இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம்தான் தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை தொகுப்பு. 1921-ல் பெல்லாரி சிறையில் இருந்தபோது ‘கம்பராமா யணம் - எ ஸ்டடி’ என்ற ஆங்கில நூலை எழுதினார். ஆங்கிலத்தில் திறனாய்வுக் கட்டுரைகள் பல வடித்தார். 

 கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகம் தொடங்கி புத்தகங்களை வெளியிட்டார். மாஜினியின் வாழ்க்கை வரலாறு, நெப்போலியனின் வாழ்க்கை வரலாறு உள் ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார். சுதந்திர போராட்ட வீரரும், தமிழில் நவீன இலக்கியத் திறனாய்வுக் கான அடிப்படைகளை அமைத்தவர் என்றும் தமிழ் நவீன சிறுகதை தந்தை என்றும் போற்றப்படும் வ. வே. சு. ஐயர், 1925-ஆம் ஆண்டு, 44-வது வயதில் ஒரு விபத்தில் காலமானார். 

நன்றி இந்து தமிழ் நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி சிவலிங்கம் 

மாணவர்கள் நலம் கருதி....
அன்புடன் சிவா....